காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்900 நாட்களை எட்டியது!
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் இன்று ஆர்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அவர்களின் போராட்டமானது இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே இந்த ஆர்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து காலை 11.30மணியளவில் கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற அவர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர் இப்போது தமிழர்களிற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததோடு, அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் தமக்கான தீர்வை வழங்க கூட்டமைப்பே தடையாக உள்ளதாகவும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அவர்களின் போராட்டமானது இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே இந்த ஆர்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து காலை 11.30மணியளவில் கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற அவர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர் இப்போது தமிழர்களிற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததோடு, அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் தமக்கான தீர்வை வழங்க கூட்டமைப்பே தடையாக உள்ளதாகவும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை