மயானத்திலிருந்து சடலங்கள் தோண்டி எடுப்பு!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில், அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை அத்தோட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த தோட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேலை செய்ய வந்த ஒருவரே, சடலங்கள் தோண்டப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக ஊர் மக்களுக்கு அறிவித்த அவர், ஹட்டன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளையுடையவர்களின் சடலங்களே அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு அனேகமாக மண்டை ஓடுகளே இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெலிங்டன் தோட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.