கல்வியியற் கல்லூரிகளை அமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!!

விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய கற்கை நெறிகளுக்காக மேலும் இரண்டு கல்வியியற் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


அலரிமாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற 19 கல்வியியற் கல்லூரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ் பயிற்சிகளைப் பெற்ற 4,300 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “2 கல்வியியற் கல்லூரிகளை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுவரையில் நாட்டில் 20 கல்வியியற் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதை துரிதமாக்கி ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 4,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேருக்கு அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

கல்வித் துறையில் மனித வள மற்றும் பௌதீக வளத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.