சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இராஜினாமா!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு அவரை மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு  பரிந்துரை செய்துள்ள நிலையில் தஹில் ரமானி இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பியுள்ளார். அதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் ரமானி அனுப்பி வைத்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த மாதம் 28ஆம் திகதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பு முடிவு செய்து பரிந்துரை செய்தது.

இதேபோல் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைத்தது.

இந்நிலையில், பணிமாற்றம் செய்யும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலிஜியத்திற்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை கொலிஜியம் ஏற்கவில்லை. இதையடுத்து, அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வரும் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி தஹில் ரமானி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.