டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

டோகோ ஜனாதிபதி எசோஸிம்னா நாஸ்ஸிங்பே (Essozimna Gnassingbe) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.


டோகோ ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளை இதன்போது சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்  இருநாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வடக்கு விஜயம் மேற்கொண்டு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

டோகோ ஜனாதிபதி எசோஸிம்னா இலங்கைக்கு வருகைத்தருவது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.