கிளிநொச்சியில் வாகனங்கள் விசேட சோதனை!

கிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் முன்னால் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச செல்லும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் குறித்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பிள்ளைகளை ஏற்றி செல்லுதல் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.