கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தேசிய சிறைக்கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


இதனை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றன.
இதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடாத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.