சூறாவளியால் நிலைகுலைந்த டோக்கியோ!

ஜப்பானியத் தலைநகர் ரோக்கியோவில் ஃபாஸாய் (Faxai) சூறாவளியால் குறைந்தது 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால் பல கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

கடுமையான சூறாவளியால் 700,000 க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சூறாவளியால் தலைநகரின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

எனவே, ரோக்கியோவின் சில பகுதிகளில் மின்சார வசதிகள் உடனடியாக வழமைநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியம் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, போக்குவரத்துச் சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 160 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.