எனது அடுத்த பயணம் இஸ்ரேல்: முதலமைச்சர்!

தன்னுடைய வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் அடுத்த பயணமாக இஸ்ரேல் செல்ல இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக 13 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்னை திரும்பினார். அவருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் ரூ.8,835 கோடி  மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார். மேலும்,  41 நிறுவனங்களுடன் புரிந்துண்ர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 35, 520க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு செல்லவில்லை என்ற குறையை தாம் போக்கிவிட்டதாகவும், தனது வெளிநாட்டு பயணம் தொடரும் எனவும்  கூறினார். அடுத்ததாக நீர் பாசனம் தொடர்பான நவீன முறையை அறிந்துகொள்ள இஸ்ரேல் செல்ல இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.