பாராளுமன்றம் திறக்கப்படவேண்டும் : சேர் கியர் ஸ்ரார்மர்!!

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் மதிப்பீட்டு ஆவணங்களை அரசாங்கம் வெளியிட்ட பின்னர் பாராளுமன்றம் மீளவும் கூட்டப்படவேண்டும் என்றும் அதுவே மிகவும் முக்கியமானது என்றும் தொழிற்கட்சி கூறியுள்ளது.


ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் கடுமையான அபாயங்கள் இருப்பதாக யெல்லோஹாம்மர் ஆவணம் (Yellowhammer document) உறுதிப்படுத்துகிறது என்று தொழிற்கட்சி உறுப்பினர் சேர் கியர் ஸ்ரார்மர் கூறினார்.

பாராளுமன்றத்தை திறப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆவணங்களை ஆராய்வதற்கும், எந்தவொரு ஒப்பந்தத்தை நிறுத்தவும் வாய்ப்பளிக்கும் என்றும் சேர் கியர் ஸ்ரார்மர் கூறினார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மதிப்பீட்டு ஆவணங்களை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.