சுற்றுலா துறையை மேம்படுத்த மிக முக்கிய வேலைத்திட்டம்!!

12 நாடுகளை கேந்திரமாகக் கொண்டு மிக முக்கிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


சரிவை எதிர்நோக்கியுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சீனா, ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1.3 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனை சரியும் செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இலவச சுற்றுலா விசா மற்றும் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் விசா அளிக்கும் திட்டம் என்பன மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதன் கால எல்லை அண்மையில் நீடிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.