யுவதி ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு!

கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அரலகங்வில- புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.