பயணத்தின் போது திடீரென பற்றியெரிந்த கார்!!

ஆந்திராவில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த காரில் திடீரென தீ ஏற்பட்ட நிலையில் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


திருப்பதியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரில், கங்காவரம் பகுதியில் வைத்து தீ ஏற்பட்டுள்ளது.

காரில் சாரதியின் மனைவி, குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் பயணித்தனர். இந்நிலையில் காரின் இயந்திரப் பகுதியில் இருந்து திடீரென தீ பற்றிய நிலையில் காரை நிறுத்த முற்பட்டபோதும் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, காரை சாரதியான விஷ்ணு அதிலிருந்து வெளியே குதித்து படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது விபத்து குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.