திருகோணமலையில் நால்வர் கைது!!

திருகோணமலை மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பேர் திருகோணமலைமாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 5 1/2 கிலோ கேரளா கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக திருகோணமலைக்கு வேன் ஒன்றில் குறித்த கேரளா கஞ்சா கொண்டுவரப்பட்டதாகவும் போதை ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களில் மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட் பொருட்களையும் திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.