எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!


காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி 03 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை செப்டெம்பர் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.