விபரம் புரியாத வயதில் பூத்துக் குலுங்கும்!!

இப்போதெல்லம் தெருவுக்கு
ஓடிப்போய்விடுகிறது
என் செல்லப்பூனைக் குட்டி

எட்டிப் பார்கும் நாயின் சல சப்பை
அது சட்டை செய்வதில்லை
கிட்டதில் வந்தால் படமெடுக்கும்
நாகம் போல் சிலிர்க மட்டும்
தெரியுமதுக்கு!

இந்த சலசலப்புக்கு அஞ்சாது நாய்கள்
கடித்து ..குதறி ...காக்கைக்கு இரையாக்கிவிடும்..
என்பதை புரியாத அசட்டுத் துணிசல் இந்த பூனைக் குட்டிக்கு

இது எப்போது வெண்டுமானாலும் மாட்டிக் கொள்ளுமோ  என்ற பயம் எனக்கு...

ஆனால் ..
ஒன்று இப்போது புரிகிறது...

விபரம் புரியாத வயதில் பூத்துக் குலுங்கும்
பெண் பூக்களையும்
இப்படித்தானே பாதுகாக்கிறார்கள் பெற்றவர்கள்!
-
தாட்சாயணி
09-09-19
-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.