தென்னாபிரிக்காவில் பாலின சமத்துவத்திற்காய் குரல்கொடுத்த சசெக்ஸ் சீமாட்டி!!

தென்னாபிரிக்காவில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு அதிக ஆதரவை சமூகம் வழங்க என்று சசெக்ஸ் சீமாட்டி தெரிவித்துள்ளார்.


ஜொகன்னஸ்பேர்க் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது மேகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவத்தைக் கொண்டிருப்பதே இங்கு முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆராய்ச்சி மற்றும் உயர் கல்விப் பொறுப்புக்களில் பெண்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் கலந்துரையாடலின்போது மேகன் குறிப்பிட்டார்.

புலமைப்பரிசில், நிதி உதவி மற்றும் குடும்பத்தினரின் ஊக்குவிப்புக் காரணமாகவே தன்னால் பல்கலைக்கழகத்திற்கு செல்லமுடிந்தது என்றும் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கவில்லையென்றால் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறமுடியாதவர்களாகி விடுவீர்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் பெண்கள் அதிகாரம் பெறும்போது அது சமூகத்தில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது என்றும் அவர்களிடம் சசெக்ஸ் சீமாட்டி கூறினார்.

10 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் ஹரி, மேகன் மற்றும் அவர்களது குழந்தை ஆர்ச்சி ஆகியோர் அங்கு சென்றபோது பேராயர் டெஸ்மண்ட் ருற்ரு வையும் சந்தித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.