மேகன் மார்கிளினால் பிரித்தானியப் பத்திரிகை மீது வழக்கு பதிவு!

சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்கிள் தனது தந்தைக்கு அனுப்பிய தனிப்பட்ட கடிதங்களில் ஒன்றை சட்டவிரோதமாக வெளியிட்டதாகக் கூறி சண்டே மெயில் பத்திரிகை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பாக இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; பத்திரிகைகளின் இடைவிடாத பிரசாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவரும் அவரது மனைவியும் உள்ளதாகத் தெரிவித்தார்.

தாம் இருவரும் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் ஜனநாயகத்தின் ஒரு மூலக்கல்லாகவும், உலகின் தற்போதைய நிலையிலும் – ஒவ்வொரு மட்டத்திலும் – பொறுப்பான ஊடகங்கள் தேவை எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான் எனது தாயை இவர்களால் தான் இழந்தேன், இப்போது என் மனைவி அதே சக்திகளுக்குப் பலியாகி வருவதை நான் பார்க்கிறேன் என இளவரசர் ஹரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாம் வெளியிட்ட செய்தியில் உறுதியாக உள்ளதாகவும் இந்த வழக்கை தீவிரமாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் இந்த வழக்குத் தொடர்பாக சண்டே மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.