நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரை விடுதலை செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்து!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரை அவுஸ்ரேலியா விடுதலை செய்யவேண்டும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.


எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளதாக நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரினா போர்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐ.நா.வின் வேண்டுகோளை அவுஸ்ரேலிய அரசாங்கம் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் தமிழ் குடும்பத்தை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்தை தூண்டும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரும் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சரும் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான மாற்றுவழிகளை கோரிவருகின்றோம் என தெரிவித்துள்ள அவர், நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரை கமரா அணிந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது அவர்களின் அந்தரங்கத்தை மீறும் விடயம் என்றும் அவர்களால் எங்கும் தப்பிக்க முடியாது என்பதால் இது தேவையற்ற நடவடிக்கை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.