இன்று அரச மருத்துவர்கள் எடுக்கவுள்ள முடிவு!!

சம்பள பிரச்சினையை முன்வைத்து தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று (03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.


இதேவேளை, நேற்று (02) தொடக்கம் 48 மணி நேரத்தினுள் தமது சேவை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க தவறினால் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் உள்ளிட்ட குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிபுரியும் அனைத்து சேவை நிலையங்களை உள்ளடக்கி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் அருண கனுகல தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் தொடக்கம் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமது பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.