பாரவூர்தியை முந்திசெல்ல முயன்றதால் இளைஞன் பலி!!

யாழ்ப்பாணத்தில் மல்லாகம் சந்திக்கு அண்மையில் பாரவூர்தியும், உந்துருளியும் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அளவெட்டி வடக்கை சேர்ந்த 19 வயதான சௌந்தர்ராஜன் விதுசன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பாரவூர்தியின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், அதை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

இதன் எதிர்ப்பக்கம் வாகனமொன்று வருவதை அவதானித்து, சடுதியாக உந்துருளியை திருப்ப முற்பட்டபோது , பாரவூர்தியில் மோதி விபத்திற்குள்ளானார்.

காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.