எப்போது சுதந்திரக் கட்சியின் இறுதி முடிவு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியுடன் இணைவது தொடர்பான இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சில உள்ளக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டி உள்ளதால் இறுதி முடிவு தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு நேற்றிரவு இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வழங்குவது தொடர்பாக சாதகமான தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.