நுவரெலியா பகுதியில் கோர விபத்து!

இராகலையில் இருந்து ஜ போரஸ்ட் முதலாம் இலக்கபகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் 05.10.2019.சனிகிழமை மாலை 06 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நுவரெலியா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தானது இராகலையில் இருந்து நுவரெலியா நோக்கி பயிற்சிக்காக ஈடுபட்டு கொண்டிருந்த போது நுவரெலியா பகுதியில் இருந்து இராகலை நோக்கியணித்த லொறி ஒன்றுக்கு இட ஒதிக்கீடு வழங்க முற்பட்ட போது பேருந்தின் சாரதியின் நெஞ்சி பகுதி முன்பகுதியில் மோதுண்டதாலயே இந்த விபத்து இடம் பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பத்தில் காயங்களுக்கு உள்ளான பேருந்தின் சாரதி ஜ போரஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.