தமிழ் தலைநகரில் வரலாற்றுச் சாதனை படைத்த டேனுவர்சன்!!

இவ்வருடத்திற்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.


குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தற்போது வரை வெளியான தகவலின் அடிப்படையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் சசிகாந்தன் டேனுவர்சன் திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்ட தமிழ் மொழிமூலத்திற்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.