கன்னியா வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!!
திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் அனுமதி சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவின் படி, புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கான தடை வழக்கு முடியும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக தொல்பொருள் திணைக்கத்தின் ஆணையாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கரிசணையுடன் செயற்படுமாறு நீதிபதியினால் அறுவுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த வழக்கின் மனுதாரர் ரமணி கோகிலவாணி சார்பில் சட்டத்தரணிகளான பிரசாந்தி, கேசவன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகிருந்தனர்.
இந்த வழக்கினை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் அனுமதி சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவின் படி, புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கான தடை வழக்கு முடியும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக தொல்பொருள் திணைக்கத்தின் ஆணையாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கரிசணையுடன் செயற்படுமாறு நீதிபதியினால் அறுவுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த வழக்கின் மனுதாரர் ரமணி கோகிலவாணி சார்பில் சட்டத்தரணிகளான பிரசாந்தி, கேசவன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகிருந்தனர்.
இந்த வழக்கினை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை