மாணவர்களிற்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி தொடர்பில் முறைப்பாடு!!

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் மாணவர்களிற்கு இரு முறை ஒரே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தரம் 7 மாணவர்களிற்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இதன்போது, இரண்டு மாணவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்த்தியுள்ளனர்.

குறித்த மாணவர்களிற்கு ஏற்கனவே அவர்களிற்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாம் முறைத போடப்பட்டதாக, மாணவர்கள் பெற்றோரிடம் முறையிட்டதையடுத்தே, விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனினும், விடயத்தை சமரசப்படுத்த முயன்று, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமக்கு தெரியாமல் தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களிடம் இது குறித்து வினவியபோது, பாடசாலை நிர்வாகம் தந்த பெயர்ப்பட்டியலின் படியே தடுப்பூசி போட்டதாக பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி போடுவதை கூட நிவாகத்தினால் சரிவர செய்யமுடியவில்லையா என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.