தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இம்ரான்கான் சுமத்திய அவதூறு- பழ. நெடுமாறன் கடும் கண்டனம்!!!

ஐ.நா. பேரவையில் உரை நிகழ்த்திய பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கம் இந்து பயங்கரவாத அமைப்பு என கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சாதி, மத வேறுபாடின்றி ஈழத் தமிழர்கள் அனைவருக்காகவும் போராடும் இயக்கம்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கமாகும்.

சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து ஈழத் தமிழினப் படுகொலைக்கு துணை நின்ற ஒரு நாட்டின் தலைமையமைச்சர் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் போராடும் இயக்கத்தை ஆழமான உள்நோக்கத்துடன் அவதூறு செய்திருக்கிறார். சிங்கள இனவெறி அரசுக்குத் தொடர்ந்து அனைத்து வகையிலும் துணை நிற்கும் பாகிஸ்தானின் உள்நோக்கத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் உணர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

-தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்  திரு பழ. நெடுமாறன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.