அகதிகள் படகு கவிழ்ந்து இத்தாலி தீவில் விபத்து!!

இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


மீட்புப் பணிகள் இடம்பெற்ற நிலையில் 13 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு கடற்படை நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த குறித்த படகானது, இத்தாலியின் லம்பெடுசா தீவிலிருந்து 6 மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் கவிழ்ந்துள்ளது.

தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று 22 பேரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த கப்பலில் சுமார் 50 பேருக்கு மேல் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை மத்திய தரைக்கடலில் இது போன்ற விபத்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.