நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் பெண்ணொருவர் வழங்கிய பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (திங்கட்கிழமை) கைதாகியுள்ளார்.

போதையில் தனது வீட்டுக்கு வந்த சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தன்னை பலவந்தமாக பாலியல் தொல்லை செய்ய முயன்று காயப்படுத்தியதாக நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் பெண் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டினால் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்த அவர், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே, தான் இராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

சபாநாயகராக இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவரும் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்ய காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது.

இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.