எரிபொருள் விலைமாற்றம்!!

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாதுள்ள நிலையில், இலங்கை - இந்திய எரிபொருள் நிறுவனம் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த மாதத்திற்கான எரிப்பொருள் விலைத்திருத்தத்திற்கமைய எரிப்பொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிப்பொருள் விலை சூத்திரத்திற்கமைவாக ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 137 ரூபாவிற்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 161 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 132 ரூபா என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை - இந்திய எரிபொருள் நிறுவனம் எரிபொருளின் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

ஒக்டைன் 92 ரக லங்கா பெற்றோல் மற்றும் எஸ்ட்ரா ப்றீமியம் யூரோ-3 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை - இந்திய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாவாகவும், எஸ்ட்ரா ப்றீமியம் யூரோ-3 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 148 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 104 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் யூரோ-4 லீற்றர் ஒன்றின் விலை 132 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா மைல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 108 ரூபாவாகவும், எக்ஸ் ப்றீமியம் யூரோ- பெற்றோல் லீறறர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை - இந்திய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.