லண்டன் பாராளுமன்ற கட்டடத்தின் மீது ஒளிர்ந்த கிரெட்டா!

சுற்றுச்சுழல் ஆர்வலரான 16 வயதான சிறுமி கிரெட்டாவின் காணொளி லண்டன் பாராளுமன்ற கட்டடத்தின் மீது பிம்பமாக ஒளிபரப்பட்டுள்ளது.


சுற்றுச்சுழல் ஆர்வலரான ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா தங்பெர்க் பருவநிலை மாற்றம் குறித்து கடந்த மாதம் ஐநாவில் உரையாற்றியிருந்தார்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறிய உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘எவ்வளவு தைரியம் உங்களுக்கு’ என கிரெட்டா எழுப்பிய கேள்வி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐநாவில் உலக நாடுகளை நோக்கி கிரெட்டா கேள்வி எழுப்பிய காட்சி, லண்டன் நகரிலுள்ள பாராளுமன்ற கட்டடத்தின் மீது பிம்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து அவசர நிலையை பாராளுமன்றம் அறிவித்து ஆறு மாதங்கள் கடந்துள்ளன.

எனினும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே குறித்த காணொளி பிம்பமாக ஒளிபரப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.