பள்ளிவாயல் நிருவாகிகளின் கடமைகள் தொடர்பான விசேட செயலமர்வு!
பள்ளிவாயல் நிருவாகிகளாக கடமை புரிவோர்களுக்கு நிருவாகிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட செயலமர்வு நேற்று (14) இடம்பெற்றது.கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாயல் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த மஸ்ஜித்களுக்கு விருது வழங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைப் பதிவு செய்தல் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்குப் பிராந்திய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைட் நளீமி, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.ஐ.மாஜிடீன், முஸ்லிம்,சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சியாத், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo



.jpeg
)





கருத்துகள் இல்லை