அரச ஊடகங்கள் பக்கசார்பான முறையில் செயற்படுகின்றன!!

அரச ஊடகங்கள் பக்கசார்பான முறையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் கலாசாரத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஊடக சந்திப்புக்களில் கூறப்படும் விடயங்கள் அரச ஊடகங்களினால் திரிபுபடுத்தப்படுகின்றது.

அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பான கொள்ளையை பின்பற்றி தேசிய வேட்பாளரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் வீழ்ச்சிக் கண்டுள்ள கலாசாரம் மற்றும் தேசிய பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.