தாய்லாந்து நாட்டில் மீட்புப்படையைத் திணறடித்த ராஜநாகம்!

தாய்லாந்து நாட்டில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 13 அடி ராஜநாகத்தை மீட்புப் படையினர் பல மணி நேரம் போராடிப் பிடித்தனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் பிரம்மாண்ட ராஜநாகம் ஒன்று புகுந்தது. அந்த ராஜநாகத்தை முதன்முதலில் அந்த குடியிருப்பின் பாதுகாவலர் பார்த்திருக்கிறார். 13 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். இது குறித்து போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் ராஜநாகத்தைப் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் அந்தப் பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்று ஒளிந்து கொண்டது. இதனால் அதைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து போராடிய மீட்புப் படையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அந்த ராஜநாகத்தை மீட்டனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் ராஜநாகம் உட்பட பல விதமான பாம்புகள், பெரிய பல்லி உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் பெருமளவு காணப்படுகின்றது. முன்னர் காட்டுப்பகுதியாக இருந்து பாம்புகளின் கோட்டை என்று அழைக்கப்பட்ட இடம் தான் இன்று பாங்காக்கில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையமாக உள்ளது. ராஜநாகத்தைப் பொறுத்தவரையில் உலகின் நீளமான மற்றும் அதிக விஷத் தன்மை கொண்ட பாம்பாக இது கருதப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் விஷம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மொத்தம் 13 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் தாங்கள் பிடித்ததிலேயே அதிக நீளம் உடையதாக இருந்தது என்று மீட்பு படையினர் கூறியுள்ளனர். பின்னர் இந்தப் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.