தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலத்தில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.