வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


யாழில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், இராசாவின் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜமேசன் அஜந்தன் என்ற இளைஞர் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்படார்.

குறித்த இளைஞரின் உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரால் கொள்ளையிடப்பட்ட நகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவை மீட்கப்படவேண்டும் எனவும், அதனால் அவரை பொலிஸாரின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.