துருக்கி குர்திஷ் போராளிகள் குறித்து புதிய குற்றச்சாட்டு!

சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் பிடியில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்வதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.


துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் நேற்று(புதன்கிழமை) ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் நாடாளுமன்ற பிரிவினரை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் கைது செய்யப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை, பேரம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைக்க உதவும் கருவியாக குர்திஷ் போராளிகள் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் தங்கள் பிடியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்து வருகின்றனர்.

ஆனாலும், வடக்கு சிரியாவில் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வலையத்தை உருவாக்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துருக்கியின் தாக்குதல் காரணமாக தப்பிச்செல்வது மிகுந்த கவலையை தருவதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.