11 ஆயிரம்பேர் மட்டு.வில் தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுசீலன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் போது தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான செயலமர்வு நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள அரச அலுவலகங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, தபால் மூலம் வாக்களிப்பின் போது மேற்கொள்ளப்படவேண்டிய கடமைகள் மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை அமுல்படுத்தல் தொடர்பில் விரிவான விளக்கங்கள் தேர்தல் உதவி ஆணையாளரினால் வழங்கப்பட்டன.

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கும் அதற்கு துணைபோவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டநடைமுறைகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 185 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகர்கள் நேற்றைய செயலமர்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.