இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்!!

தனுஸ்கோடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த இருந்த சுமார் 10 இலட்சம் ரூபா மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



அத்துடன் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் மூவரும் மண்டபம் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

சுமார் 150 கிலோகிராம் எடை கொண்ட பதப்படுத்தபட்ட கடல் அட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மண்டபம் வனசரக அதிகாரி வெங்கடேஸ் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.