காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் கடும் தாக்குதல்!

காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் இன்று (திங்கட்கிழமை) மாலை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுத்து வருவதாக ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய இராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050இற்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 25பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.