ஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான தேர்தல் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.


காலியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி அளிக்கும் வாக்குகள் மிகவும் முக்கியமானவை. நாட்டின் எதிர்கால பயணத்தினை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல்.

அதற்காக வழங்கும் வாக்குகள் மிகவும் முக்கியமானவை. நாட்டின் துரதிஷ்டத்திற்கு இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால், எதிர்கால சந்ததி அவர்களை சபிக்கும்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.