நாஜி படையின் பதுங்கு குழி நவீன ஆடம்பர விருந்தகமாகிறது!
ஜேர்மனியை சேர்ந்த என்.எச். விருந்தக சேவை ஓட்டல் குழுமம், நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர அதிசொகுசு விருந்தகமாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.
2 ஆம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்கு குழியை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 1942-ம் ஆண்டில் 1,000 தொழிலாளர்களை கொண்டு 300 நாட்களில் இந்த பதுங்கு குழி கட்டி முடிக்கப்பட்டது. 3.5 மீட்டர் தடிமன் கொண்ட சுவர்களுடன் 18,000 பேர் தங்குவதற்காக குறித்த ரகசிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த பதுங்கு குழியை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதை இடிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் தேவைப்பட்டதாலும், இடிக்கும்போது அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளும் தரைமட்டமாகக்கூடும் என்பதாலும் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் குறித்த பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஜேர்மனியை சேர்ந்த என்.எச். விருந்தக சேவை குழுமம் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு விருந்தகமாக மாற்ற திட்டமிட்டது.
குறித்த விருந்தகம் 5 அடுக்குமாடிகளுடன் ‘பிரமிடு’ வடிவத்தில் கண்களை கவரும் வண்ணம் பிரமாண்டமாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
136 அறைகளுடன், மதுபான விடுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் என சகல வசதிகளும் இந்த விருந்தகத்தில் இருக்கும் என என்.எச். குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த விருந்தகம் 2021-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
2 ஆம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்கு குழியை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 1942-ம் ஆண்டில் 1,000 தொழிலாளர்களை கொண்டு 300 நாட்களில் இந்த பதுங்கு குழி கட்டி முடிக்கப்பட்டது. 3.5 மீட்டர் தடிமன் கொண்ட சுவர்களுடன் 18,000 பேர் தங்குவதற்காக குறித்த ரகசிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த பதுங்கு குழியை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதை இடிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் தேவைப்பட்டதாலும், இடிக்கும்போது அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளும் தரைமட்டமாகக்கூடும் என்பதாலும் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் குறித்த பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஜேர்மனியை சேர்ந்த என்.எச். விருந்தக சேவை குழுமம் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு விருந்தகமாக மாற்ற திட்டமிட்டது.
குறித்த விருந்தகம் 5 அடுக்குமாடிகளுடன் ‘பிரமிடு’ வடிவத்தில் கண்களை கவரும் வண்ணம் பிரமாண்டமாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
136 அறைகளுடன், மதுபான விடுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் என சகல வசதிகளும் இந்த விருந்தகத்தில் இருக்கும் என என்.எச். குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த விருந்தகம் 2021-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை