மூன்று அரசு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை!!

மூன்று அரசு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்டவுள்ளது.

அந்தவகையில் வீடமைப்பு, கட்டுமான மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவையே சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றன.

இதேவேளை, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐ.டி.என்) ஆகியவைக்கு பக்கச்சார்பான தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கும்படி இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளத் தவறினால் குறித்த அரச ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.