சுஜித்திற்காக பிரபலங்களின் உருக்கமான பதிவு!!

தமிழகத்தின் திருச்சியில் இரண்டு வயதான சுஜித் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.


குறித்த ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழையினால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Cheran
@directorcheran
திருச்சி நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 5மணி நேரமாக மீட்கமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைக்காக வேண்டுவோம்.
"அறம்" போன்ற திரைப்படங்கள் இந்த ப்ரச்னையை வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை இந்நிகழ்வு காட்டுகிறது. #prayforchild

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் அதுகுறித்து உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


@Actor_Vivek
சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.


மீண்டு வா சுஜித்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும்.. மீண்டு வா சுஜித் எங்களுடைய பிரார்த்தனைகள் உன்னோடு இருக்கிறது என கூறியுள்ளார்.


மகிழ்ச்சியான முடிவு

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில் போர்வெல்லில் குழந்தையை மீட்கும் பணி 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சுஜித்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள், இது அறம் திரைப்படத்தின் சோகமான மறு உருவாக்கம்.. அங்கு மகிழ்ச்சியான முடிவு இருக்கும் என நம்புவோம் என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.