ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஈரான்!

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் சிரியாவில் உள்ள வட்டாரங்களால் தகவல் கிடைத்துள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.


இந்த விடயம் குறித்து இரு ஈரானிய அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

“பாக்தாதியின் மரணம் குறித்து ஈரானுக்கு சிரிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது”, என களத்தில் இருந்து பெற்றுக்கொண்ட  அதிகாரி  ஒருவர் கூறினார்.

இரண்டாவது ஈரானிய அதிகாரி பாக்தாதி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை மளிகையில் இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.