பொது அமைப்புக்களின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை கையளிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்கப்படவுள்ளது.


இன்று(திங்கட்கிழமை) மாலை நான்கு மணியளவில் சுயாதீனக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவிற்கும் இடையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின்போதே இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையினால் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை உள்ளடக்கிய சுயாதீனக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சுயாதீனக்குழுவானது, கிழக்கிலும் வடக்கிலும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்திருந்தது.

முதலாவதாக, திருகோணமலை உப்புவெளியில் உள்ள மேய்ப்பு பணி நிலையத்தில் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான அனுகுமுறைகளை செய்வது என்பது தொடர்பாக பொது அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முந்தினம் மாலை தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்திலும் சுயாதீன குழுவினரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பொது அமைப்புக்ககளின் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.