முள்ளிவாய்க்காலில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்ற வாரத்துக்கு முன்னர் தொடக்கம் கிளிநொச்சியில் உறவினர் வீட்டொன்றில் தங்கியிருந்தனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இந்தநிலையில் யாருமில்லாத வீட்டில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மலசலகூடத்துக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.