மர்மப்பொதியினால் வவுனியாவில் மக்கள் பீதி!

வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்டமர்ம பொதியினால் சற்று நேரம் அங்கு பதட்டமான நிலமை தோன்றியிருந்தது.


நேற்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில்பயணித்த சிலர் பொதி ஒன்றினை வீதி ஓரத்தில்வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனை அவதானித்தபொதுமகன் ஒருவர் அவசர பொலிசாருக்குதகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்தவவுனியா பொலிசார் குறித்த பொதியினை சோதனைசெய்து பார்த்தபோது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக அருகில்இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்தசிசிடிவி கமராவை பொலிஸார் பார்வையிட்ட போது கயஸ் வாகனத்தில் வந்தவர்கள்அந்த பொதியினை வீதிஓரத்தில் போட்டுவிட்டு சென்றமை பதிவாகியுள்ளது.


இந்நிலையில் சிசிடிவியில் பதிவான வாகனஇலக்கங்களையும் பதிவுசெய்துகொண்டு பொலிஸார் சென்றுள்ளனர்..

இதேவேளை இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.