காட்டுத் தீயால் கோலா கரடிகள் உயிரிழப்பு!

கடந்த சில தசாப்தங்களாக அவுஸ்ரேலியாவில் மாத்திரம் தனித்துவமாக வாழும் உயிரினமான கோலா கரடிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அவற்றின் எண்ணிக்கையும் தற்போது குறைவடைந்து வருவதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான கோலா கரடிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

சிட்டிக்கு வடக்காக 250 மைல்கள் தொலைவில் உள்ள நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தில் கோலா கரடியினங்கள் அதிகளவாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

அந்த பிராந்தியத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

கோலா கரடியினங்கள் ஒரு மாறுபட்ட இனமாக இருப்பதால் அவற்றின் உயிரிழப்புகள் துன்பகரமானதாகவே இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இதனை தேசியளவில் சோகமாகவே கருதுவதாக ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார். அண்மைய தசாப்தங்களில் பூர்வீக உயிரினங்கள் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன.

கோலா கரடிகள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும், தற்போது 43,000 கரடிகளே இருப்பதாக கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

அவற்றின் வீழ்ச்சிக்கு வாழ்விட இழப்பு, நோய்த் தாக்கம், நாய்களின் தாக்குதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன காரணமாக இருக்கலாம் என்று விலங்கியல் ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அத்துடன், ‘மார்சுபியல்’ (Marsupial) வகையைச் சேர்ந்த குறித்த விலங்கினங்கள் அவுஸ்ரேலியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் பாதிக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.