முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு!

பாதுகாப்பு பிரிவுகளில் கடைமையாற்றும் எந்தவொரு படைவீரரும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் , தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உரிமையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுப்பெற்றுள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது புகைப்படங்களை பயன்படுத்த இடமளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் பக்கச்சார்ப்பின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையின்மூலம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.